Keladi En Paavaiye

Bookmark and Share
Song : Keladi En Paavaiye
Movie : Gopura Vasalile
Singer : S.P.Balasubramaniam
Lyricist : Pirai Soodan
Year : 1991




கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

தன்னைத் தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததேன்

ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா
உன்னை என்னைச் சேர்த்து வைக்கக் கோபம் ஏனம்மா
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா
உன்னை என்னைச் சேர்த்து வைக்கக் கோபம் ஏனம்மா

என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு ஹோ இன்பம் பொங்கும் என்றுமே

கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே

கானம் பாடும் வீணை நாடும் வாடலாமோ
மீட்டும் வேளை ராகமின்றிப் போகுமா
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே

சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே

நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்ந்தது ஹோ இன்னும் இங்கு வெட்கமா

கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே

Nee Paadhi Naan Paadhi

Bookmark and Share
Song : Nee Paadhi Naan Paadhi
Movie : Keladi Kanmani
Singers : K.J.Yesudas, Uma Ramanan
Lyricist : Vaali
Year : 1990




நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே...

நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

வானப் பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப் பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவ பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும்
உன்னாலே..
மெல்ல சிரிக்கும்
உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும்
முன்னாலே..
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது...

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா..
இந்த மனம்தான்
என் மன்னவனும் வந்து உலவும் நந்தவனம் தான்
அன்பே வா..
சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்...

நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே...

நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே